Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் குண்டுகளை வீசிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டுகளை வீசிய ஆடவர் கைது

Share:

மலாக்கா, ஜூன் 13-

சிங்கப்பூரை தளமாக கொண்டு செயல்படும் சட்டவிரோத வட்டிமுதலை கும்பலின் கையாளாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் நேற்று கைது செய்தது.

மலாக்கா, அலோர் காஜா, தாமான் மெங்குவாங்-ங்கில் இம்மாதம் 6ஆம் தேதி, வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில், அதன் உரிமையாளரான 38 வயதுடைய பெண் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 25 வயதுடைய அவ்வாடவரை போலீஸ் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வட்டி முதலை கும்பலிடம், வேலை ஒன்றுக்கு ஆயிரம் வெள்ளியைப் பெற்றுக்கொண்டு, அதுப்போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார்.

இதுவரையில், மலாக்கா மற்றும் பேராக்-க்கில் பெட்ரோல் குண்டுகளை வீசிய இரு சம்பவங்களில், அவ்வாடவர் 10ஆயிரம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சதிநாச வேலையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் செக்சியன் 435 பிரிவின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்வாடவருக்கு 14 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம் என ஜைனோல் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு