Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பஹாங் சுல்தானை கோபப்படுத்திய பக்காத்தான் ஹரப்பான் ஆதரவு இணைய செய்தித்தளம் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

பஹாங் சுல்தானை கோபப்படுத்திய பக்காத்தான் ஹரப்பான் ஆதரவு இணைய செய்தித்தளம் மீது விசாரணை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 01 -

பஹாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹ்மத் ஷாஹ்-வை கோபமடைய செய்திருந்த பக்காத்தான் ஹரப்பான் ஆதரவு இணையச் செய்தித்தளம் மீது விசாரணையை மேற்கொள்ள தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் உத்தரவிட்டார்.

அந்த செய்தித்தளத்தின் பெயரை அமைச்சரும் பஹாங் அரண்மனையும் வெளியிடவில்லை.

பள்ளிவாசல்களில் பழைய போக்குகள் கைவிடப்பட வேண்டுமென தாம் கூறிய கருத்தை சில ஊடகங்கள் தவறாக புரிந்துக்கொண்டிருப்பதாகவும் எந்த தரப்பையும் குறிப்பிடாமல் தாம் போதுவாக கூறிய கருத்தை கட்சி ஒன்றுக்கு கூறியது போல் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும் பஹாங் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, PAS கட்சிக்கு பஹாங் சுல்தான் எச்சரிக்கை விடுத்ததாக இதற்கு முன்பு வெளியிட்டிருந்த செய்தியை மீட்டுக்கொண்ட ஹரப்பான் டேய்லி இணைய செய்தித்தளம், அதற்காக நேற்று மன்னிப்பைக் கூறியிருந்தது.

சம்பந்தப்பட்ட இணையச் செய்தி தளத்தின் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த அமைச்சர் பாஹ்மி, இனம், சமயம், மலாய் ஆட்சியாளர் குறித்த 3R விவகாரங்களை சாதாரணமாக கருத வேண்டாமென அனைத்து வித ஊடகங்களுக்கும் நினைவுறுத்தினார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்