Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புதிய கல்வியாண்டு தொடங்கியது, தமிழ்ப்பள்ளிகளில் 13 ஆயிரத்தி​ற்கு மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில்
தற்போதைய செய்திகள்

புதிய கல்வியாண்டு தொடங்கியது, தமிழ்ப்பள்ளிகளில் 13 ஆயிரத்தி​ற்கு மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில்

Share:

கெடா, மார்ச் 11 -

2024/2025 புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால்பதித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

​சீனப்பள்ளிகளில் இதர இனத்து மாணவர்களின் பதிவுடன் அப்பள்ளி தனது எண்ணிக்கையை தற்காத்துக்கொண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதலாம் ஆண்டில் நுழைந்த 16 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் மாணவர்கள் சரிவை எதிர்கொாண்டுள்ளன.

வரலாற்றுப்பொருந்திய கெடா, கூலிம்,லாடாங் சுங்கை டிங்கின் தமிழ்ப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார் என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று தொட​ங்கிய கெடா மாநில புதிய கல்வியாண்டில் ​தேசியப்பள்ளி, ​சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 31 ஆயிரத்து 110 மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால் பதித்து இருப்பதாக கெடா மாநில கல்வி இலாகா இயக்குந​ர் Haji Othman தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2024/2025 கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 4 லட்சத்து 47 ஆயிரத்து 982 மாணவர்கள், பள்ளிக்கான் முன் உதவித் திட்டத்தின் ​கீழ் இந்த வாரத்தில் கல்வி உதவித் தொகையை பெறுவர் என்று கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 903 பள்ளிகளுக்கு 6 கோடியே 70 லட்சம் வெள்ளி நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்