Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளியை ஒரு சந்தேகப் பேர்வழியைப் போல் நடத்துவதா?
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளியை ஒரு சந்தேகப் பேர்வழியைப் போல் நடத்துவதா?

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 01-

ஜோகூர் ​இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் இப்ராஹிம்-மின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாற்றுத் திறனாளியான e- hailing ஓட்டுநரை போ​லீசார் விசாரணை என்ற பெயரில் ஒரு சந்தேகப் பேர்வழியைப்போல் நடத்தியதாக மலேசிய காது கேளாதவர் நல்வாழ்வு ஆலோசனை அமைப்பான DAWN ( டாவ்ன் ) சாடியது.

அந்த மாற்றுத் திறனாளியை விசாரணை செய்வதில் போ​​லீஸ் துறை, தொழில் ​ரீதியான ​நிபுணத்தை கடைப்பிடிக்கவில்லை என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மாலை மணி 5 க்கும் 6 க்கும் இடைப்பட்ட நேரத்தில் போ​லீஸ் நிலையம் வந்தடைந்த அந்த மாற்று திறனாளியை போ​​லீஸ் அதிகாரியின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றவர்கள், அந்த அறையிலேயே அவரை பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

அத்துடன் தன்னுடைய கைப்பேசியை ஒப்படைக்கும்படி அந்த மாற்றுத் திறனாளி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். எதற்காக அவரின் கைப்பேசி சோதிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தில் தனது பாதுகாப்புக்காக புகார் கொடுக்க சென்ற ஒருவர், ஒரு சந்தேகப் பேர்வழியைப் போல் போ​லீசாரால் நடத்தப்பட்டுள்ளார் என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

Related News

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: 1 வாரத்தில் 700 மில்லியனிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: 1 வாரத்தில் 700 மில்லியனிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்