Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

அதிக சிக்கலை ஏற்படுத்தி வரும் இலக்கவியல் தொழில்நுட்பம் தொடர்புடைய குற்றச்செயல்களை கையாளுவதற்கு அத்துறையை அடிப்படையாக கொண்ட புதிய இலாகா ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை அரச மலேசிய போலீஸ் படை கொண்டு இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும், மக்களுக்கும் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் இந்த பரிந்துரையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் என்ற அழைக்கப்படும் இலக்கவியல் தொழில்நுட்பம் உலகின் புரட்சியையையும், அன்றாட மக்களின் வாழ்வியல் போக்கையும் மாற்றி அமைத்து வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இத்துறை சார்ந்த குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசிய போலீஸ் படையினர் மிகுந்த சிக்கலையும், சவாலையும் எதிர்நோக்கியிருப்பதாக கோலாலம்பூர் PULAPOL போலீஸ் பயிற்சி மையத்தில் 217 ஆம் ஆண்டு போலீஸ் தினத்தையொட்டி வழங்கிய செய்தியில் டான் ஸ்ரீ ரசாருதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை