Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காலணி விவகாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்களுக்கு எதிராக எம்.சி.எம்.சி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

காலணி விவகாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்களுக்கு எதிராக எம்.சி.எம்.சி எச்சரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 08-

அரபு மொழியில் ''அல்லா' என்ற சொல்லை குறிக்கும் காலணி வடிவமைப்பில் சர்ச்சைகுரிய கருத்துக்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (எம்.சி.எம்.சி) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இனம், மதம், அரசக் குடும்பம் தொடர்பான விவகாரத்தை உட்படுத்துகின்ற விஷயங்கள் தொடர்பாக, குறிப்பிடப்பட்ட இணையத்தளத்தின் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு மொதுமக்களை ஓர் அறிக்கையில் எம்.சி.எம்.சி வலியுறுத்தியுள்ளது.

மக்களிடையே பதற்றத்தை தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு அச்சிக்கலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்கள் ஏதெனும் கண்டறியப்பட்டால் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 -யின் கீழ் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எம்.சி.எம்.சி சாடியுள்ளது.

இந்த காலணிக்குறித்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு இஸ்லாமிய மேம்பாட்டு துறை மற்றும் இதர அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்றவர்கள் பொறுமையுடனும் அமைதியாகவும் இருக்கும்படி எம்.சி.எம்.சி கேட்டுக் கொண்டுள்ளது.

சர்ச்சைக்குறிய காலணியை விற்றதை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளுமாறு மத விவகார அமைச்சர் ந’இம் மோக்த்தார், ஜாக்கிம்- மை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து Vern’s Holding Sdn Bhd நிறுவனமும் அத்தகைய காலணிகளை வெளியிட்டிருந்ததற்கு மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்