மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பணியில் உள்ள விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் அறிவித்துள்ளது.
அனைத்து பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைந்த இந்த முதற்கட்ட சோதனையில், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டிலுள்ள விமானிகளும் பரிசோதிக்கப்பட்டனர்.
அடுத்ததாக, சுமார் 2,840 விமானப் பணியாளர்களுக்கும், வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், சகோதர நிறுவனமான ஃபயர் ஃபலாய்-யிலும் பரிசோதனை நடைபெற்று வருகின்றது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி 158 விமானிகள் மற்றும் 163 விமானப் பணியாளர்களில் பெரும்பான்மையானோரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.
முதற்கட்ட சோதனை நிறைவடைந்தது முக்கியமான நடவடிக்கை என்றாலும், தங்களது பணிகள் இத்துடன் நிறைவடையவில்லை என அக்குழுமத்தின் கேப்டன் நஸருத்தீன் ஏ. பக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியல் குழு தலைமையில் தொடர்ந்து போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அக்குழும் தெரிவித்துள்ளது.








