Aug 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை
தற்போதைய செய்திகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

Share:

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பணியில் உள்ள விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் அறிவித்துள்ளது.

அனைத்து பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைந்த இந்த முதற்கட்ட சோதனையில், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டிலுள்ள விமானிகளும் பரிசோதிக்கப்பட்டனர்.

அடுத்ததாக, சுமார் 2,840 விமானப் பணியாளர்களுக்கும், வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சகோதர நிறுவனமான ஃபயர் ஃபலாய்-யிலும் பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி 158 விமானிகள் மற்றும் 163 விமானப் பணியாளர்களில் பெரும்பான்மையானோரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.

முதற்கட்ட சோதனை நிறைவடைந்தது முக்கியமான நடவடிக்கை என்றாலும், தங்களது பணிகள் இத்துடன் நிறைவடையவில்லை என அக்குழுமத்தின் கேப்டன் நஸருத்தீன் ஏ. பக்கார் தெரிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியல் குழு தலைமையில் தொடர்ந்து போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அக்குழும் தெரிவித்துள்ளது.

Related News

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற கெஅடிலான் இளைஞர் பிரிவு

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்