Aug 17, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

Share:

சாலை விபத்துகளால் மலேசியா ஆண்டுதோறும் 30 பில்லியன் ரிங்கிட் வரை சமூக பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த இழப்பில் உயிரிழப்புகளால் ஏற்படும் உற்பத்தித்திறன் மற்றும் வருமான இழப்பு, மருத்துவச் செலவுகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், உயிரிழப்பை பண மதிப்பில் அளவிட முடியாது என்றும், கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் படி, தினமும் சராசரியாக 18 பேர் உயிரிழப்பதை சுட்டிக் காட்டிய அவர், அவற்றில் 80.6 சதவீத விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே காரணமாக இருப்பது கவலைக்குரியது என்றும் நந்தா தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு என்பது ஓர் அமைச்சகத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், கல்வி, சட்ட அமலாக்கம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற கெஅடிலான் இளைஞர் பிரிவு

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

சபா மருத்துவனை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி பறிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்

சபா மருத்துவனை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி பறிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி