Aug 17, 2026
Thisaigal NewsYouTube
பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி
தற்போதைய செய்திகள்

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

Share:

ஜோகூர் மாநிலம், பாசீர் கூடாங்கில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் 20 அடி உயரமுள்ள இரசாயனக் கழிவுத் தொட்டியில் தவறி விழுந்த 26 வயது தொழிலாளி உயிரிழந்தார்.

நேற்று இரவு 9.51 மணியளவில் மெட்டல் ஹைட்ராக்சைடு ஸ்லட்ஜ் டேங்க் எனப்படும் இரசாயனக் கழிவுத் தொட்டியில் அவர் விழுந்ததாக பசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைக் குழு தளபதி ஃபிர்தௌஸ் அஹமத் தெரிவித்துள்ளார்.

அவசர அழைப்பு கிடைத்த நான்கு நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் இருந்த தொழிலாளியின் உடலை மீட்க சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளையில், சம்பவ இடத்திலேயேதொழிலாளி உயிரிழந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்தார்.

அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

Related News

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற கெஅடிலான் இளைஞர் பிரிவு

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்