வரும் அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ள ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் விலையிலான மடானி டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபீக் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நாளிலிருந்து மலேசியர்களிடையே போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதல் மடானி டிக்கெட்டுகள் வழங்க முடியுமா?, தேவை உள்ளதா? என்பது குறித்து பரிசீலித்து, அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று துன் ரசாக் மண்டபத்தில் நடைபெற்ற ஐடியா 2026 நிறைவு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபீக் ஜோஹாரி இதனைத் தெரிவித்துள்ளார்.








