Aug 17, 2026
Thisaigal NewsYouTube
சபா மருத்துவனை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி பறிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சபா மருத்துவனை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி பறிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்

Share:

சபா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் இயக்குநர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கி, சபா மாநில சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிப்ளி அகமது தெரிவித்துள்ளார்.

இந்த நிர்வாக மாற்றம், குற்றச்சாட்டு தொடர்பான முழுமையான விசாரணை தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமைச்சின் உள்நிலை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதவி மாற்றத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரி சபா சுகாதாரத் துறையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுவார் என்றாலும், இந்த மாற்றம் அவரது சேவை நிலை அல்லது பதவி தரத்தை குறைப்பதாகாது என்றும் சுல்கிப்ளி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில், விசாரணையில் அவர் தலையிடும் வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக மட்டுமே மருத்துவமனை இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விவரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், அதே மருத்துவமனையில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர் ஒருவர் இந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், குறைந்தது இருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கையை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற கெஅடிலான் இளைஞர் பிரிவு

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி