Aug 17, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

Share:

பள்ளி கட்டுமான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என தன்னை விமர்சித்த வாக்காளருக்கு எதிராக முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ தொடுத்த அவதூறு வழக்கை விசாரணை செய்த அப்பீல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதி அஜீஸுல் அஸ்மி அத்னான் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு , சர்ச்சைக்குரிய பதிவில் நேர்மையின்மையை சுட்டிக்காட்டும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, அது ஜூன் லியோ வை நேரடியாக குறிக்கவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 முதல் 2022 -ஆம் ஆண்டு வரை Hulu Selangor நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜூன் லியோ, கடந்த 2021ஆம் ஆண்டு எம்.ரவி என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

2020-ஆம் ஆண்டு முகநூலில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், ஹுலு பெர்னாம் பகுதியில் எஸ்.ஆர்.கே.தி ஆஸ்காட் பள்ளி கட்டுமான விவகாரத்தில் ஜூன் லியோ நடவடிக்கை எடுக்கவில்லை என ரவி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அப்பீல் மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரவிக்கு வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்குமாறும் லியோ-க்கு உத்தரவிட்டுள்ளது.

Related News

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற கெஅடிலான் இளைஞர் பிரிவு

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்

புக்கிட் திங்கி ஆலய சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சிசிடிவி ஆதாரமோ, நேரடி சாட்சிகளோ இல்லை என போலீஸ் தகவல்