பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தொழிலாளர் சோமநிதி வாரியமான இபிஎப் பணத்தை மீட்பதற்குச் சந்தாதார்களுக்கு மற்றொரு வாய்ப்பு இனி வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்பான இபிஎப் பணம், அதன் உன்னத நோக்கத்தை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை குறிப்பிட்டார்.
இபிஎப் பணத்தை மீட்பதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்கட்சியினர் இவ்விவகாரத்தை ஓர் ஆயுதமாக எடுத்த போதிலும், இபிஎப் பணத்தை மீட்க இனி அனுமதி இல்லை என்பதே தமது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.







