பெட்டாலிங் ஜெயா, மே 06-
குறுகிய காலத்தில், இரண்டு பிரபல தேசிய காற்பந்து வீரர்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி காரணங்களை ஆராய்வதற்கு பாதிக்கப்பட்ட இருவருடைய வாக்குமூலங்களை போலீசார் பெற்று வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை கூறுகின்றது.
இது தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதுடன், இதன் நோக்கம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அது அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கோலா திரங்கானு- வில் தேசிய வீரர் மற்றும் திரங்கானு FC ஆன அக்யார் ரஷீத், ஆசாமிகளால் ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் பெட்டாலிங் ஜெயா- வில் உள்ள ஒரு சந்தையில் சிலாங்கூர் FC மற்றும் தேசிய அணியின் நட்சத்திரமான பைசால் ஹலீம், அடையாளம் தெரியாத நபர்களால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.








