Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இயற்கை, மனித நேய காப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது
தற்போதைய செய்திகள்

இயற்கை, மனித நேய காப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது

Share:

நீலாய், மார்ச் 31 -

கடந்த மார்ச் 26 ஆம் தேதி நெகிரி செம்பிலான், நீலாய் தமிழ்ப்பள்ளியில் ஜோபா மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இயற்கை மற்றும் மனித நேய காப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டது.

மலேசிய நாட்டின் சிறப்புமிக்க 'sejahtera' என்கிற மனிதக்குல மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கருத்தை மையமாக கொண்டு 'Bionity School' என்ற திட்டத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோபா கல்வி கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்ககது.

இத்திட்டத்தை கல்வியிலும் சமூகத்தினரிடையும் மேம்பாடு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 17 ஆம் தேதியிலிருந்து மார்ச் 27 ஆம் தேதி வரையில் பல மாநிலங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய ஜோபா முனைவர் ஜான் பிரிட்டோ, மலேசிய ஜோபா இயக்கத்தின் ஆலோசகர் குமாரவேலு, மலேசிய ஜோபா இயக்கத்தின் தலைவர் மனோகரன் , நீலாய் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கலா ரெங்கசாமி மற்றும் நீலாய் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இவ்வேளையில் நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

இயற்கையை பாதுகாக்கும் நல்லதொரு சிந்தனையுடன் நீலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் செடிகள் நட்டு அதற்கு நீர் ஊற்றி இத்திட்டத்தை சிறப்பாக தொடக்கி வைத்தனர்

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்