Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி மீதான மிரட்டல் புகார் தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி மீதான மிரட்டல் புகார் தள்ளுபடி

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், முன்னாள் தலைமை ஆணையர் தன் ஸ்ரீ ஆசாம் பாக்கிக்கு எதிராக வர்த்தகர் ஆல்பர்ட் டெய் அளித்த குற்றவியல் மிரட்டல் புகார், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 'மேல் நடவடிக்கை இல்லை' என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சபாவில் உள்ள அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிப்படுத்த முயன்றபோது ஆசாம் பாக்கி தன்னை மிரட்டியதாக ஆல்பர்ட் டேய் புக்கிட் அமான் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இக்குற்றச்சாட்டை மறுத்த ஆசாம் பாக்கி, கடந்த ஜூன் 3ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின், குற்றவியல் மிரட்டலுக்கான கூறுகள் நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்