நாளை திங்கட்கிழமை, ஹாஜி பெருநாளை கொண்டாடவிருக்கும் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் இனத்தவர்களுக்கும் மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar மற்றும் பேரரசியார் Raja Zarith Sofiah தங்களின் ஹாஜி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நாட்டின் மாமன்னராக பொறுப்பேற்றிருக்கும் தமக்கு சிறந்த முறையில் நாட்டை நிர்வகிப்பதற்கு ஆசிர்வதிக்கவும் தம்முடைய முழு கடமைகளை நிறைவேற்ற பக்கபலமாக இருந்து அருள்புரிய கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்வதாக முகநூல் அகப்பக்கத்தில் மாமன்னர் Sultan Ibrahim தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இப்புனித பூமியில் உள்ள மலேசிய யாத்ரீகர்கள் பாதுகாப்பாக வழிபடவும் Haji Mabrur ஆசீர்வாதத்தை அனைவரும் பெறுவதற்கு தாம் பிரார்த்தித்துக் கொள்வதாக மாமன்னர் கூறினார்.








