Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவர்

Share:

ஸ்ரீ அமான், ஏப்ரல் 17-

பெந்த்தோங், கம்போங் குபாலில் உள்ள ஒரு பாழடைந்த கல்லறை பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 6.43 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக ஶ்ரீ அமான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் மேத்யூ மங்கி தெரிவித்தார்.

சந்தேகிக்கும் 38 வயது ஆண்ட்ரூ ஜராவ் என்கிற அவ்வாடவர் இச்சம்பவத்திற்கு அடுத்து தப்பியோடியதாகவும் அவர் மீது ஏற்கனவே மூன்று போதைப்பொருள் குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் மேத்யூ மங்கி கூறினார்.

இதுக்குறித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் 14(a) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவ்வாடவரின் பெயர் தேடப்படும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக மேத்யூ மங்கி மேலும் விளக்கினார்.

Related News