எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 9 கிலோ போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு அந்நியப் பிரஜைகள் உட்பட மூவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினர்.
அந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தலா 15 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டதுடன், தலா ஒருவருக்கு பத்து பிரம்படித் தண்டனைகளை விதிக்குமாறு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்ளூரை சேர்ந்த 43 வயது கே. தினகரன், ஒரு வங்காளதேசியான 28 வயது அஸ்ராபுல் அலாம் மற்றும் ஓர் இந்தியப் பிரஜையான 50 வயது எம். அறிவழகன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹதரியா சையத் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த மூவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிலாங்கூர், அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


