May 22, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக் பயணங்களை ரத்து செய்தது, மலேசியா ஏர்லைன்ஸ்
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக் பயணங்களை ரத்து செய்தது, மலேசியா ஏர்லைன்ஸ்

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 18-

இந்தோனேசியா, ருவாங் மலையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்- KLIA-விலிருந்து சபா, சரவாக்-விற்கும் அல்லது அவ்விரு மாநிலங்களிலிருந்து KLIA-விற்குமான சில பயணங்களை மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இன்று ரத்து செய்துள்ளது.

ருவாங் மலையில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பை குறித்த நிலவரங்களை தனது தரப்பு அணுக்கமாக கண்காணித்துவரும் வேளையில், ரத்து செய்யப்படும் பயணங்களால் பாதிக்கப்படுகின்ற பயணிகளுக்கு அது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது தெரியப்படுத்தப்படும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் கூறியிருந்தது.

நிலைமை சரியானவுடன் பாதிக்கப்பட்ட பயணிகளை, மாற்றுவழி பயணங்களின் வாயிலாக அழைத்து செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். பயணிகள் மற்றும் தங்களின் பணியாளர்களின் நலன் கருதி, பயணங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ரத்து செய்யப்படும் பயணங்கள் குறித்த நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவலை, My Booking தளம் வாயிலாகவும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவும் பயணிகள் அறிந்துக்கொள்ளலாம் என மலேசியா ஏர்லைன்ஸ் வலியுறுத்தியது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி