Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சாலை பேருந்து மோதி, மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலை பேருந்து மோதி, மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி

Share:

பாலிங், மார்ச் 29-

தொழிற்சாலை பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8.19 அளவில் கெடா, பாலிங், கோலா கேடில்-லில், சாலை முச்சந்தியிலுள்ள சமிக்ஞ்சை விளக்கின் முன்புறம் நிகழ்ந்த அந்த விபத்தில் தலைப்பகுதியில் பலத்த காயங்களுக்கு இலக்கான நபர் 43 வயது ஓய் சு சிங்க் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் முன்னே நின்றிருந்த வாகனத்தை முந்தி செல்ல முட்ப்பட்டுள்ளார். அப்போது, வலது பக்கம் செல்வதற்காக நின்றுக்கொண்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டியைப் பார்க்காத அவர், அவரது மோட்டார்சைக்கிளை வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.

எதிர்தடத்தில் தூக்கியெறியப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளோட்டி கடும் காயத்திற்கு இலக்காகி உயிரிழந்ததாக, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் ஷம்சுதீன் மாமாட் கூறினார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை