Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்

Share:

செமஞ்சே, புக்கிட் ப்ரோகா -வில் 0.8 ஹெக்டேர் பரப்பளவில் காட்டில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து நேற்று இரவு 7:39 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, செமஞ்சே தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செமஞ்சே தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

தீ ஏற்பட்ட விபத்தை குறித்து காரணம் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, இந்த தீ சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக வைரலாகியதுடன் மலையேறும் நடவடிக்கைகளுக்கு புக்கிட் ப்ரோகா காட்டுப்பகுதி பிரசித்து பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை