Mar 20, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தில் சிக்கிக்கொண்ட 2 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வாகனத்தில் சிக்கிக்கொண்ட 2 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் பிண்டாங்-ங்கில் வாகனத்தினுள் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தையை மலேசிய பொது தற்காப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

நேற்றிரவு மணி 8.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தென் கொரியாவைச் சேர்ந்த ஆடவர், தனது மகனுக்கு வாகனத்தினுள் டயப்பர்கள் மாற்றியுள்ளார். வாகனத்தின் சாவி தனது மகனின் கையில் உள்ளதை அறிந்திடாமல், கதவை அவர் மூடியதால், வாகனத்தின் அனைத்து கதவுகளும் பூட்டிக்கொண்டன.

சம்பவத்தின் போது, அவ்வாடவரின் மனைவியும் மூத்த பிள்ளையும் வாகனத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தனர்.

பின்னர், இரவு மணி 8.55 அளவில் அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த கோலாலம்பூர் பொது தற்காப்பு படையினர், 10 நிமிடங்களில் வாகனத்தின் கதவைத் திறந்து அச்சிறுவனை மீட்டனர்.

Related News