கடந்த மூன்று ஆண்டுகளாக 3 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்து வந்ததாக Tahfiz சமயப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர், கிளந்தான், கோத்தாபாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
30 வயது Muzaidi Mohamad என்ற அந்த தலைமையாசிரியர், Bachok- கில் உள்ள தனது அலுவலகத்திலும், Machang- கில்உள்ள Tahfis பள்ளியின் தங்கு விடுதியிலும் 12 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மாணவர்களை தனது பாலியல் சேட்டைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








