Mar 21, 2026
Thisaigal NewsYouTube
விதைப்பை அறுவைச் சிகிச்சையால் உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்த முதியவருக்கான இழப்பீட்டை ரத்து செய்வதில் அரசாங்கம் தோல்வி
தற்போதைய செய்திகள்

விதைப்பை அறுவைச் சிகிச்சையால் உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்த முதியவருக்கான இழப்பீட்டை ரத்து செய்வதில் அரசாங்கம் தோல்வி

Share:

ஷாஹ் அலாம், மே 27-

விதைப்பை அறுவைச் சிகிச்சையின் காரணமாக, உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்துள்ள 64 வயது முதியவருக்கு 500 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டு தொகையை வழங்க, சிலாங்கூர், செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்தாண்டு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த தீர்ப்புக்கு எதிராக, அரசாங்க தரப்பு ஷாஹ் அலாம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற வழக்கில், நீதித்துறை ஆணையர் சோங் யோவ் சோய், முந்தைய தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட முதியவர் உடலுறவு புரிவதற்கான தன்மையை இழந்ததற்காக 150 ஆயிரம் வெள்ளியும் மன உளைச்சலுக்கு ஆளானதற்காக 200 ஆயிரம் வெள்ளியையும் அரசாங்கம் இழப்பீடாக வழங்க வேண்டுமென சோங் யோவ் சோய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட முதியவருக்கு செலாயாங் மருத்துவமனையில், விதைப்பை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்வதால் ஏற்படும் விளைவுகளை, தமக்கு அறுவைச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கூறி, அம்முதியவர் சுகாதார அமைச்சு, செலாயாங் மருத்துவமனையின் இயக்குநர், அலட்சியமாக நடந்துக்கொண்ட 5 மருத்துவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கை தொடுத்திருந்தார்.

உடலுறவுக்கான தகுதியை இழந்ததால், தமது குடும்ப உறுப்பினர்களே தம்மை கேலி செய்வதாகவும் அவர் வழக்கு மனுவில் கூறியிருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து