Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நோட்டீஸுக்காக காத்திருக்க வேண்டாம், தொகுதியை காலி செய்யவும்
தற்போதைய செய்திகள்

நோட்டீஸுக்காக காத்திருக்க வேண்டாம், தொகுதியை காலி செய்யவும்

Share:

கோலா திரங்கானு, ஏப்ரல் 12-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவை வழங்கியதற்காக, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கட்சியில் அவர்களது உறுப்பினர் தகுதியை இயல்பாகவே இழந்துவிட்டனர். அந்த எழுவரும் தங்களது தொகுதிகளை காலி செய்ய வேண்டுமென பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் வலியுறுத்தினார்.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி எதிர்தரப்பினருக்கு ஆதரவை வழங்கும் பெர்சாத்துவின் மக்கள் பிரதிநிதிகள் தங்களது உறுப்பினர் தகுதியை இழக்கச் செய்யும் கட்சியின் சட்டத்திருத்தத்தை தேசிய சங்கப் பதிவகத் துறை அங்கீகரித்துள்ளது. பெர்சாத்துவிடமிருந்து அதிகாரப்பூர்வ நோட்டிஸுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்றாரவர்.

பிரதமருக்கு ஆதரவளித்ததற்காக, பெர்சாத்துவிலிருந்து தாங்கள் எந்தவொரு நோட்டீஸும் கிடைக்காததால், தமது தொகுதியை காலி செய்வது தொடர்பில், ஏதும் கருத்துரைக்க போவதில்லை என புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோசுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த ரசாலி இட்ரிஸ், கூடிய விரைவில் பெர்சாத்து அதன் சட்டத்திருத்தத்துடன் நோட்டீஸை அந்த எழுவருக்கும் அனுப்பி வைக்கும் என்றார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்