கோலாலம்பூர், மே 03-
ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- ஜாலான் ராஜா சூலான்- னிலிருந்து ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- ஜாலான் புக்கிட் பிந்தாங்- வரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மொத்தம் 20 போலீஸ் அதிகாரிகள் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியப்படுகின்றது.
கோலாலம்பூர் மாநகர் மன்றமும், கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையினரும் ஒன்றிணைந்து புக்கிட் பிந்தாங்கை சுற்றியுள்ள வாகன நெரிசலை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை ஒரு வழி பாதையிலிருந்து இருவழிப்பாதையாக மாற்றம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டதாக கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் கூறினார்.
கடந்த புதன்கிழமை தொடங்கி புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலை சுற்றிலும் போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அது சாலையை பயன்படுத்துவோர் பாதை மாற்றத்தை தெரிந்து கொள்வதாக அமையும் என்று அஸ்ரி அக்மர் இன்று விளக்கினார்.
இத்தகைய திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் சாலை விபத்துக்கள் நிகழ்வதை தவிர்க்க வகை செய்யும் என்று அஸ்ரி அக்மர் மேலும் குறிப்பிட்டார்.








