கெரிக், ஜூன் 04-
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர், மிக அபாயகரமாக பேருந்தை செலுத்திய காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த பேருந்து ஓட்டுநருக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
வடக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக் அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட அந்த பேருந்து ஓட்டுநர் 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அபராதத் தொகை விதிக்கப்பட்டதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.








