மேன்மை தங்கிய பேராக் சுல்தான், Sultan Nazrin Shah, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் 9 ஆம் தேதி முதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி வரை ஈராண்டு தவணைக் காலத்திற்கு Sultan Nazrin Shah அப்பொறுப்பை வகித்து வருவார்.
இதுநாள் வரை அம்மன்றத்தின் தலைவராக இருந்து வந்த சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah-விற்கு பதிலாக Sultan Nazrin Shah அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச முத்திரைக் காப்பாளர் Syed Danial Syed Ahmad அறிவித்துள்ளார்.








