May 22, 2026
Thisaigal NewsYouTube
காதலியால் கத்தி குத்துக்கு ஆளாகிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

காதலியால் கத்தி குத்துக்கு ஆளாகிய ஆடவர்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 03-

கோலா க்ராய், டத்தாரான் லெமாங் மாநெக் உராய்-யில் உள்ள ஒரு பொதுக் கழிவறைக்கு முன், காதலியால் மூன்று முறை வயிற்றில் குத்தப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் தெரிவித்தார்.

28 வயதுடைய அப்பெண் காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்தி தனது 45 வயதுடைய காதலனை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை புரிந்த குற்றத்திற்காக அப்பெண்ணை கைது செய்ததாக முகம்மது சாக்கி கூறினார்.

சுங்கை தொங் செத்தியு திறங்காணு-விலிருந்து கோலா க்ராய்-யில் உள்ள சில இடங்களுக்கு பாதிக்கப்பட்டவர் அப்பெண்ணை அழைத்து வந்திருந்த வேளையில் இக்கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முகம்மது சாக்கி தெளிவுப்படுத்தினார்.

அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வாடவர் கத்தி குத்துக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முகம்மது சாக்கி மேலும் விளக்கமளித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு