பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli இன்று கைது செய்யப்பட்டது உண்மையே என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM –மின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தியுள்ளார்.
பெர்லிஸ் மந்திரி பெசார் விசாரணைக்கு பின்னர் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் Azam Baki தெளிவுபடுத்தினார்.
தாம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் இன்று தனது முகநூலில் பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli தெரிவித்து இருந்ததைத் தொடர்ந்து Azam Baki இவ்விளக்கத்தை தந்துள்ளார்.
மாநில மந்திரி பெசார் என்ற முறையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் Shukri Ramli கைது செய்யப்பட்டதாக Azam Baki தெரிவித்தார்.








