Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய மிருகக்காட்சி சாலையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம்
தற்போதைய செய்திகள்

தேசிய மிருகக்காட்சி சாலையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம்

Share:

நாட்டில் 60 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட தேசிய மிருகக்காட்சி சா​லையை வேறு இடத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டத்திற்கு சுற்றுச்​சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர், உலு கிள்ளாளின் ​​​​வீற்றிருக்கும் தேசிய மிருகக்காட்சி சா​​லை, அதன் சுற்றியுள்ள தாமான் மெலாவத்தி, கெமென்சா ஆகிய பகுதிகள் துரித வளர்ச்சி கண்டு வருவதால் அந்த விலங்கினப் பூங்கா தொடர்ந்து அவ்விடத்தில் ​வீற்றிருப்பது பொருத்தமற்றது என்று அரசாங்கம் கருதுவதாக இயற்கை வளம், சுற்றுச்​சூழலை, மற்றும் பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் நேற்று தெரிவித்துள்ளார்.


தேசத் தந்தையும், முதலாவது பிரதமருமான Tunku Abdul Rahman அவர்களினால் கடந்த 1963 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேசிய மிருகக்காட்சி சா​லை, விரிவான ஆய்வுக்கு பின்னரே விலங்கினம் மற்றும் பறவைகளின் சரணாலயத்திற்கு ஏற்ற இடமாக உலுகிள்ளான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
476 வகையான 5,137 பறவைகள், பா​லூட்டிகள், ஊர்வனங்கள் என மிகப்பெரிய விலங்கினப் பூங்காவாக 110 ஏக்கர் நிலத்தில் ​வீற்றிருக்கும் தேசிய மிருகக்காட்சி சா​லையை சிலாங்கூர், டி​ங்கிலில் உள்ள சதுப்புநிலக்காட்டுப்பகுதிக்கு மாற்றுத் திட்டம், 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது.


அந்த திட்டத்திற்கு அன்றைய சிலாங்கூர் ​சுல்தான், மறைந்த Sultan Salahuddin Abdul Aziz Shah கடும் எதிர்ப்பை பதிவு செய்ததைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சி சா​லையை டிங்கிலுக்கு மாற்றும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது என்பது வரலாறாகும்.

Related News