Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நிறுவனத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
தற்போதைய செய்திகள்

நிறுவனத்திற்கு இரண்டு வார கால அவகாசம்

Share:

நெகிரி செம்பிலான், மார்ச் 21 -

நெகிரி செம்பிலான், ஜெம்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட Rompin- னில் செயல்பட்டு வரும் Great Platform Sdn. Bhd. நிறுவனத்தில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் அரசாங்க ஏஜென்சிகளின் அமலாக்க அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகாவுடன் ஜெம்புல் மாவட்ட மன்றம், குடிநுழைவுத்துறை, போலீஸ்படை, பெர்கேசோ மற்றும் டோஸ்ம் எனப்படும் மலேசிய புள்ளி விவர இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மிக மோசமான சூழலில் அந்நியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

மிக அசுத்தமான நிலையில், அருவருக்கத்தக்க சூழலில் உள்ள அந்த குடியிருப்புகள் நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகா நிர்ணயித்துள்ள நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்வதாக இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். .

இதன் தொடர்பில் ஆள்பல இலாகாவினால் அங்கீகரிக்கப்பட்ட CLQ தங்கும் மையத்திற்கு அந்நியத் தொழிலாளர்கள் அனைவரும் இன்னும் இரண்டு வாரத்திற்கு இடம் மாற்ற செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்.சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்