Mar 19, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாதுகாவலர் சுயநினைவின்றி உள்ளார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாதுகாவலர் சுயநினைவின்றி உள்ளார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் ஒன்றில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியிருந்த அலோங் என்றழைக்கப்படும் பாதுகாவலர் இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை என அவரது முதலாளி பாராஹ் எம்டி இசா தெரிவித்துள்ளார்.

தமக்கு தனிப்பட்ட பாதுகாவலராக இருந்து வந்த அவருக்கு நேர்ந்துள்ள அந்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், தன் முன்னே நடந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் தாக்கத்திலிருந்து தாம் இன்னும் விடுப்படவில்லை என்றார்.

சுயநினைவின்றி இருக்கும் தமது பாதுகாவலர் விரைவில் குணமடைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்கும்படி பாராஹ் எம்டி இசா தமது பேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News