Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளை திருடியதாக டெக்னீசியனுக்கு 28 மாத சிறைத்தண்டனை
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடியதாக டெக்னீசியனுக்கு 28 மாத சிறைத்தண்டனை

Share:

கடந்த வாரம் மோட்டார் சைக்கிளை திருடி வைத்திருந்த குற்றத்திற்காக டெக்னீசியன் ஒருவருக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்க அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

32 வயது முகமது ஃபிக்ரி அமர் என்கிற அந்த டெக்னீசியன் மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிதயா முகமது நூர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஓராண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதி நள்ளிரவு 2.20 மணியளவில் கெடா, முகிம் லிம்போங், கம்போங் தெலாகா பாத்து -வில் ஹோண்டா வேவ்ப் ரக மோட்டார் சைக்கிளை திருடியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு