May 22, 2026
Thisaigal NewsYouTube
6 மாத குழந்தையை பாதுகாவலருக்கு ஜாமின் மறுப்பு
தற்போதைய செய்திகள்

6 மாத குழந்தையை பாதுகாவலருக்கு ஜாமின் மறுப்பு

Share:

பாங்கி, ஏப்ரல் 19-

சிலாங்கூர், ஹுலு லங்காட்,பேரனாங்கிலுள்ள அடுக்ககத்தில், பிறந்து 6 மாதமே நிரம்பிய ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொன்றது தொடர்பில், அதன் தந்தை இன்று பாங்கி மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மஜிஸ்ட்ரெட் நூர்தியானா முகமது நவாவி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, பாதுகாவலரான 25 வயதுடைய முகமது ஐசத் சமீன் எனும் அவ்வாடவர் தன் மீதான குற்றச்சாட்டு புரிவதாக தலையசைத்தார்.

கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவரிடமிருந்து வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 14ஆம் தேதி இரவு மணி 8 முதல் மறுநாள் காலை மணி 7.40 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், அவர் அக்குற்றத்தை புரிந்ததாக, குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதணையில் அவர் சயாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவருக்கு ஜாமின் வழங்க மறுத்த முகமது ஐசத், உயிரிழந்த குழந்தை மீதான உடற்கூறு ஆய்வறிக்கை, இரசாயனம் மற்றும் தடயவியல் அறிக்கைகள் முதலானவை கிடைப்பதற்கு ஏதுவாக, வழக்கின் மறுசெவிமடுப்பை மே 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி