Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை
தற்போதைய செய்திகள்

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை

Share:

மாரான்- மார்ச் 21

மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து பகாங், மாரானை நோக்கி பாதயாத்திரை பயணம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

பத்துமலை திருத்தலத்தின் பாதயாத்திரை கழகமான Selangor, Batu Caves மாரத்தான் கிளப் ஏற்பாட்டில் பெருநடை அரசாங்க சார்பற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பு மன்றத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கிய இந்த பாதயாத்திரை பயணத்தில் 120க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஹுலு சிலாங்கூர், கிள்ளான், பந்திங், கெடா மற்றும் பல இடங்களிலிருந்து பங்குக்கொண்டுள்ளனர்.

நான்கு நாட்களை உள்ளடக்கிய கோலாலம்பூரிலிருந்து மாரான் வரை 204 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் புனித பயணம் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R.சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

17 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24 ஆம் தேதிக்குள் ஆயிரக்கணக்கானோர் இந்த பாதயாத்திரை பயணத்தில் கலந்து கொண்டு ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் ஒன்றுக்கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.

கிழக்கை நோக்கி ஓர் ஆன்மீக சிந்தனையுடன் மன வலிமையை உறுதிப்படுத்தக்கூடிய இந்தப் பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்