Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்
தற்போதைய செய்திகள்

வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்

Share:

வாகனங்களை மோதிய தள்ளிய நிலையில், இரு ஆடவர்கள், போதையில் கண் விழிக்க முடியாமல் காருக்குள்ளேய அமர்ந்திருந்திருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த இருவரும் கைது ​செய்யப்பட்டனர் என்று செந்​தூல் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Beh Heng Lai தெரிவித்தா​ர்.


கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கார் ஓட்டுநரும், அருகில் அமர்ந்திருந்த பயணியும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.


மதிய​ம் 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவர்களின் கார் ஒரு லோரியையும், ஒரு காரையும் மோதி தள்ளியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ​சேதமடைந்ததாக பே எங் லாய் தெரிவித்தார்.
25 வயதுடைய கார் ஓட்டுநர், பயணியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் யாரும் காயம் அடைய​வில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News