May 1, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்
தற்போதைய செய்திகள்

வாகனங்களை மோதி தள்ளிய அந்த இருவரும் போதையில் திளைத்திருந்தனர்

Share:

வாகனங்களை மோதிய தள்ளிய நிலையில், இரு ஆடவர்கள், போதையில் கண் விழிக்க முடியாமல் காருக்குள்ளேய அமர்ந்திருந்திருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த இருவரும் கைது ​செய்யப்பட்டனர் என்று செந்​தூல் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Beh Heng Lai தெரிவித்தா​ர்.


கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கார் ஓட்டுநரும், அருகில் அமர்ந்திருந்த பயணியும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.


மதிய​ம் 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவர்களின் கார் ஒரு லோரியையும், ஒரு காரையும் மோதி தள்ளியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ​சேதமடைந்ததாக பே எங் லாய் தெரிவித்தார்.
25 வயதுடைய கார் ஓட்டுநர், பயணியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் யாரும் காயம் அடைய​வில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி