May 22, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லாரி மோதியதில் துரித பேருந்து ஓட்டுநர் மரணம், அறுவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லாரி மோதியதில் துரித பேருந்து ஓட்டுநர் மரணம், அறுவர் உயிர் தப்பினர்

Share:

கெடா, மார்ச் 17 -

கெடா, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 75.2 ஆவது கிலோமீட்டார் தொலைத்தூரத்தில் டிரெய்லர் லாரி ஒன்று மோதியதில் துரித பேருந்து தீப்பிடித்து எரிந்து அப்பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், ஆறு பேர் சேதாரமின்றி உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 4.02 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 18 அதிகாரிகள்,அமான்ஜெயா மற்றும் பென்டாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் உட்பட கூருன் தன்னார்வ தீயணைப்பு படை ஆகியோரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக குவார் செம்பெடாக் தீயணைப்பு, மீட்புபடை நிலையத்தின் தலைவர் Fauzi Razali தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அந்த பேருந்து ஓட்டுநரான 42 வயதுடைய இந்திய ஆடவரின் உடல் எரிந்த நிலையில் இருக்கையில் சிக்கியிருந்ததாக கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 19 முதல் 57 வயதிற்கு உட்பட்ட பயணிகள் மற்றும் அந்த பேருந்தின் உதவி ஓட்டுநர் ஆபத்துமின்றி உயிர் தப்பியதாகபௌசி ராசாலி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன் விபத்தில் காயமுற்ற அந்நபர்கள் பென்டாங் Pendang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் 32 வயது டிரெய்லர் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்