Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லாரி மோதியதில் துரித பேருந்து ஓட்டுநர் மரணம், அறுவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லாரி மோதியதில் துரித பேருந்து ஓட்டுநர் மரணம், அறுவர் உயிர் தப்பினர்

Share:

கெடா, மார்ச் 17 -

கெடா, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 75.2 ஆவது கிலோமீட்டார் தொலைத்தூரத்தில் டிரெய்லர் லாரி ஒன்று மோதியதில் துரித பேருந்து தீப்பிடித்து எரிந்து அப்பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், ஆறு பேர் சேதாரமின்றி உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 4.02 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 18 அதிகாரிகள்,அமான்ஜெயா மற்றும் பென்டாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் உட்பட கூருன் தன்னார்வ தீயணைப்பு படை ஆகியோரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக குவார் செம்பெடாக் தீயணைப்பு, மீட்புபடை நிலையத்தின் தலைவர் Fauzi Razali தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அந்த பேருந்து ஓட்டுநரான 42 வயதுடைய இந்திய ஆடவரின் உடல் எரிந்த நிலையில் இருக்கையில் சிக்கியிருந்ததாக கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 19 முதல் 57 வயதிற்கு உட்பட்ட பயணிகள் மற்றும் அந்த பேருந்தின் உதவி ஓட்டுநர் ஆபத்துமின்றி உயிர் தப்பியதாகபௌசி ராசாலி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன் விபத்தில் காயமுற்ற அந்நபர்கள் பென்டாங் Pendang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் 32 வயது டிரெய்லர் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்