May 22, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்

Share:

கங்கார், மே 04-

அரசாங்க ஊழியர்களுக்கு தாம் அறிவித்துள்ள சம்பள உயர்வுத் திட்டம், வரும் டிசம்பர் மாதம் திட்டமிட்டப்படி அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி நிர்வகிப்பில் போதுமான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பது மூலம் இந்த சம்பள உயர்வுத் திட்டத்தை எவ்வித சிக்கலின்றி அமல்படுத்த முடியும் எ​ன்று நிதி அமைச்சருமான பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் கூடுதலான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது ​மூலம் அடுத்த ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு கூடுதலாக 10 பில்லியன் அல்லது ஆயிரம் கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நிதி நிர்வகிப்பில் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டு இருப்பது மூலம் இந்த சம்பள உயர்வை சிக்கலின்றி வழங்க முடியும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.

Related News