பிரம்படி தண்டனையால் குற்றவாளியின் உடம்பில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அது அத்தரப்பினர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையாக அமைய வேண்டும் என்பதோடு, சமூகத்தில் அவர்கள் திருந்தி வாழவும் வகை செய்ய வேண்டும் என பட்டர்வொர்த், உயர்நீதிமன்ற நீதித்துறை ஆணையர் ஃபாத்தியா இட்ரிஸ் வலியுறுத்தினார்.
போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 29 வயதுடைய முகமட் அஸ்ருல் அஸ்லான் முகமட் எனும் இளைஞருக்கு, கடந்த மாதம் 30ஆம் தேதி 10 பிரம்படிகள், 7 ஆண்டுகள் சிறைதண்டனையை அவர் வழங்கியிருந்தார்.
நீதித்துறையின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த தீர்ப்பு தொடர்பான முழு விளக்கத்தில், அவர் அந்த எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளார்.,
சம்பந்தப்பட்ட இளைஞர் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி, பினாங்கு, பெர்மத்தாங் பாவு-விலுள்ள கம்போங் ஒன்றில் 139.8 கிராம் எடையிலான மெத்தம்பேட்டமைன் வகை போதைப்பொருளை விநியோகித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி


