பிரம்படி தண்டனையால் குற்றவாளியின் உடம்பில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அது அத்தரப்பினர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையாக அமைய வேண்டும் என்பதோடு, சமூகத்தில் அவர்கள் திருந்தி வாழவும் வகை செய்ய வேண்டும் என பட்டர்வொர்த், உயர்நீதிமன்ற நீதித்துறை ஆணையர் ஃபாத்தியா இட்ரிஸ் வலியுறுத்தினார்.
போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 29 வயதுடைய முகமட் அஸ்ருல் அஸ்லான் முகமட் எனும் இளைஞருக்கு, கடந்த மாதம் 30ஆம் தேதி 10 பிரம்படிகள், 7 ஆண்டுகள் சிறைதண்டனையை அவர் வழங்கியிருந்தார்.
நீதித்துறையின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த தீர்ப்பு தொடர்பான முழு விளக்கத்தில், அவர் அந்த எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளார்.,
சம்பந்தப்பட்ட இளைஞர் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி, பினாங்கு, பெர்மத்தாங் பாவு-விலுள்ள கம்போங் ஒன்றில் 139.8 கிராம் எடையிலான மெத்தம்பேட்டமைன் வகை போதைப்பொருளை விநியோகித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


