சபா, மே 06-
சபா, ஜாலான் கம்போங் லிங்குங்கானில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதில் வயோதிக தம்பதியர் உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 69 வயது மிடின் @ மைடின் சின்ஜா மற்றும் அவரின் மனைவி 65 வயது ஜுராய் இம்ரான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர்.
இது தொடர்பாக, கிடைக்க பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், டொயோட்டா அன்சர் ரக கார் ஒன்று பெரோடுவா மைவி காருடன் மோதிய நிலையில் இருப்பதை கண்டதாக சபா, மலேசிய தீயணைப்பு மீட்புப் படையின் செயல்பாட்டு நிலைய அதிகாரி ரிக்கி மோகன் சிங் ராம்டே தெரிவித்தார்.
பெரோடுவா மைவி ரக காரில் பயணித்த பாதிக்கப்பட்ட வயோதிக தம்பதியர் காரில் சிக்கிய நிலையில் இறந்திருப்பது கண்டறியப்பட்டதாக ரிக்கி மோகன் கூறினார்.
மற்றொரு காரில் பயணித்த 69 வயது, 64 வயது கணவன் - மனைவி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் மேலும் விவரித்தார்.








