May 22, 2026
Thisaigal NewsYouTube
குழாயில் சிக்கியிருந்த ஆணின் உடல் மீட்பு
தற்போதைய செய்திகள்

குழாயில் சிக்கியிருந்த ஆணின் உடல் மீட்பு

Share:

கோலாலம்பூர், மார்ச் 10 -

சுங்கை வேய் அருகிலுள்ள Sungai கிள்ளான் ஆற்றின் தண்ணீர் குழாய் கம்பத்தில் சிக்கியிருந்த ஓர் ஆணின் உடல் மீட்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து நேற்று காலை 9:01 மணியளவில் கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போது பாதிக்கப்பட்டவரின் உடல் ஆடைகளுடன் காலணி இல்லாமல் தண்ணீர் குழாய் கம்பத்தில் சிக்கியிருந்தது கண்டெடுக்கப்பட்டதாக வான் அஸ்லான் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் உள்ளூர் ஆண் என்றும் நீல நிற ஆடையும் இடது கையில் கருப்பு நிற கடிகாரம் கட்டியிருப்பது தெரியவந்ததாக அவர் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

Related News