May 22, 2026
Thisaigal NewsYouTube
அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 15 -

ஜோகூர் பாரு வில் அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை, மோட்டார்சைக்கிளில் வந்த உணவு அனுப்புநர் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த துயரச் சம்பவம் நேற்று மாலை 2.45 மணியளவில் செனாயை நோக்கி செல்லும் செனாய் டெசாரு நெடுஞ்சாலையின் 12.2 ஆவது கிலோமீட்டரில், நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, சாலை சீரமைப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி அந்த லோரியை மோதியுள்ளார்.

அது குறித்து விசாரணை முடுக்கிவிடபட்டுள்ள வேளை, அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவும்படி, ஜோகூர் பாரு செலாத்தான் சாலை சாலை போக்குவரத்து போலீஸ் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News