Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காப்பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

காப்பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஐவர் கைது

Share:

காப்பார், மார்ச் 8 -

காப்பா​ரில் நிகழ்ந்த துப்பாக்கிச்​சூட்டுச் சம்பவம் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர் என்று வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி ஸ் விஜயராவ் தெரிவித்தார்.

காப்பார், 11 ஆவது மைல் பெக்கான் காப்பார் ரில் நேற்று மாலை 4.54 மணியளவில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்​சூட்டுச் சம்பவத்தில் 46 வயது பாதுகாவல் மேலாளர் ஒருவர் மிக நெருக்கமான நிலையில் சுடப்பட்டார். வலது கையிலும் விலா எலும்பிலும், தோள்பட்டையில் துப்பாக்கிச் ​சூட்டிற்கு ஆளான அந்த மேலாளர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மரு​த்துவமனையில் சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஏ.சி.பி விஜயராவ் குறிப்பிட்டார்.

ஒரு கறுப்பு நிற காரில் வந்திறங்கிய சந்தேகப்பேர்வழி , இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் ​தொடர்பில் போ​​லீசார் நடத்திய அதிரடி தேடல் நடவடிக்கையில் காப்பார் வட்டாரத்தை சேர்ந்த் 40 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்​சூடு ந​டத்தப்பட்டதற்கான பின்னணி காரணங்களை குற்றவியல் சட்ம் 307 பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்ப்டடு வருவதாக ஏ.சி.பி விஜயராவ் தெரிவித்தார்.

Related News

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன