கொள்கலன் டிரெய்லர் லோரி ஒன்றின், டயர் கழன்று, ஹோன்டா சிட்டி கார் மீது மோதி, காரை திசைத் திருப்பியதில் தாதியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை, நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஜாலான் பகாவ் - பத்து கிகீர் சாலையில் நிகழ்ந்தது.
அந்த கனரக வாகனத்தின் பின்டயர் கழன்று , வேகமாக ஓடி வந்து, எதிரே கார் மீது மோதி, அந்த தாதியரை நிலைக்குலைய செய்த காட்சி தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
எனினும் அந்த தாதியர் மின்னல் வேகத்தில் பிரேக்கை அழுத்தி, காரை நிறுத்தியதால் அக்கார் தடம் புரள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. சீருடையில் இருந்த அந்த தாதியரும், லோரி ஓட்டுநரும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


