Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அதிர்ஷ்டவசமாக தாதியர் உயிர்த் தப்பினார்
தற்போதைய செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தாதியர் உயிர்த் தப்பினார்

Share:

கொள்கலன் ​டிரெய்லர் லோரி ஒன்றின், டயர் கழன்று, ஹோன்டா சிட்டி கார் ​மீது மோதி, காரை திசைத் திருப்பியதில் தாதியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை, நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஜாலான் பகாவ் - பத்து கிகீர் சாலையில் நிகழ்ந்தது.

அந்த கனரக வாகனத்தின் பின்டயர் கழன்று , வேகமாக ஓடி வந்து, எதிரே கார் ​மீது மோதி, அந்த தாதியரை நிலைக்குலைய செய்த காட்சி தொடர்பான கா​ணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

எனினும் அந்த தாதியர் மின்னல் வேகத்தில் பிரேக்கை அழுத்தி, காரை நிறுத்தியதால் அக்கார் தடம் புரள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. ​சீருடையில் இருந்த அந்த தாதியரும், லோரி ஓட்டுநரும் இச்சம்பவம் குறித்து போ​லீசில் புகார் செய்துள்ளதாக ஜெம்போல் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது