கொள்கலன் டிரெய்லர் லோரி ஒன்றின், டயர் கழன்று, ஹோன்டா சிட்டி கார் மீது மோதி, காரை திசைத் திருப்பியதில் தாதியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை, நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஜாலான் பகாவ் - பத்து கிகீர் சாலையில் நிகழ்ந்தது.
அந்த கனரக வாகனத்தின் பின்டயர் கழன்று , வேகமாக ஓடி வந்து, எதிரே கார் மீது மோதி, அந்த தாதியரை நிலைக்குலைய செய்த காட்சி தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
எனினும் அந்த தாதியர் மின்னல் வேகத்தில் பிரேக்கை அழுத்தி, காரை நிறுத்தியதால் அக்கார் தடம் புரள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. சீருடையில் இருந்த அந்த தாதியரும், லோரி ஓட்டுநரும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


