May 22, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் அடையாளம் காணப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் அடையாளம் காணப்பட வேண்டும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 -

சராவாக், கூச்சிங்-கிலுள்ள KK மார்ட் நிறுவன கடை ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில், போலீஸ் குற்றவாளியை விரைந்து அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் வலியுறுத்தினார்.

அதுவரையில், பொதுமக்கள் நிதானம் காப்பதோடு, அச்சம்பவம் குறித்து போலீஸ் உரிய விசாரணையை மேற்கொண்டு குற்றவாளியைப் பிடிப்பதற்கு வழிவிட வேண்டுமென பாடில்லா யூசோப் கேட்டுக்கொண்டார்.

சராவாக்-கிலுள்ள கிளை உட்பட கடந்த வாரத்தில் KK மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 3 கடைகள் மீது இதுவரையில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பேராக், பீடோர் மற்றும் பகாங், குவாந்தான்-னிலுள்ள KK மார்ட் கடைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தது.

''அல்லா'' சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்ததற்காக அந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இனம் சமயம், பின்னனி புலம் முதலானவற்றைப் பார்க்காமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கூச்சிங்-ங்கில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் வருத்தமளிப்பதாக, DAP கட்சியைச் சேர்ந்த பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் பண்டார் கூச்சிங் வருத்தம் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு