May 22, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன

Share:

குவாலா சிலாங்கூர், மார்ச் 5 -

இன்று காலையில் கோலசிலாங்கூரில் Pulau Angsa கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள், இன்று நள்ளிரவுக்குள் மீட்கப்படுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடல்சார் போலீஸ் பிரிவுக்கு சொந்தமான AW139 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நால்வர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த ஹெலிகாப்படரின் உடைந்தப் பாகங்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் மொகமாட் அம்பியா னொர்டின் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்பகுதியில் பொது மக்கள் நெருங்கி விடாமல் இருப்பதற்கு சம்பவம் நிகழ்ந்த இடத்தை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News