மலாக்கா, காஜா பெராங்கில் உள்ள சீக் கியா ஈன் பௌத்த ஆலயத்தில், விசாக தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களாக நடைபெற்ற இலவச சைவ உணவு விநியோகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.
கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 3,000 பேருக்கு காலை முதல் இரவு வரை தொடர்ந்து உணவு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் டேனியல் ஆங் தெரிவித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான விசாக ஊர்வலம் வரும் மே 30-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் 40 பௌத்த அமைப்புகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த ஊர்வலம் காஜா பெராங், துன் பேராக், லோரோங் பாண்டான், தெங்கேரா உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









