Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கப்பட வேண்டும்- ஜெய்த் இப்ராஹிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கப்பட வேண்டும்- ஜெய்த் இப்ராஹிம் வலியுறுத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 03-

UITM எனப்படும் MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருதய அறுவை சிகிச்சை தொடர்பான முதுகலை கல்வியில், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடமளிப்பது குறித்து இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என உயர்கல்வி அமைச்சர் ஜாம்பிரி அப்துல் கதிர் கூறியுள்ளதை, முன்னாள் சட்ட அமைச்சர் ஜெய்த் இப்ராஹிம் இன்று கடுமையாக சாடினார்.

UMNO மீதான பயம் காரணமாகவே, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறிய ஜெய்த் இப்ராஹிம், அந்த பரிந்துரையை அக்கட்சியினர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமென, தனது X பதிவில் அவர் வலியுறுத்தினார்.

1970ஆம் ஆண்டுகளில் மலாய் அல்லாதவர்கள் மருத்துவர், தாதியர், விரிவுரையாளர் போன்ற துறைகளை ஆக்கிரமித்திருந்த சூழலைக் கண்டு பயந்திருந்த UMNO, தற்போதும் அந்த பயத்துடன் நாட்டை வழிநடத்துவதும் சரியல்ல என்றார் அவர்.

பூமிபுத்ராக்களுக்காக தொடங்கப்பட்ட UITM பல்கலைக்கழகம் தொடங்கி, நாட்டிலுள்ள அனைத்து கல்வி கழகங்களும் தகுதியுள்ள அனைத்து மலேசியர்களுக்கும் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

நாட்டின் பொது சுகாதார பராமரிப்பு துறையில், தற்போது, போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத சூழல் நிலவுவதால், அந்நடவடிக்கை பூமிபுத்ராக்களுக்கே பெரும் ஆதாயத்தை அளிக்கும்.

நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வந்தாலும்கூட, அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கான நிதி ஆற்றலை அரசாங்கம் கொண்டுள்ளது.

ஆகையால், கல்வி கழகங்களில் பாகுபாடு பார்க்காமல், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக... | Thisaigal News